Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

ஜுன் 23, 2023 09:49

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் குலசேகரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, ரெங்கநாதபுரம் கிராமத்தில் அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில், சுரண்டை வழித்தடத்தில் குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். 

புதியவழித்தடத்தில் இயக்கம் அதனை தொடர்ந்து அந்த வழித்தடங்களில் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தற்போது சங்கரன்கோவில் முதல் சுரண்டை வழித்தடத்தில் இந்த கிராமங்களை இணைத்து 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டு அந்த வழித்தடத்தில் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்